நன்னேரிய மகா வித்தியாலயத்தின் கணித ஆய்வு கூடத்தை உடைத்து பொருட்களை திருடிய மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாணவர்கள் கணித அறையின் ஜன்னலை உடைத்து 7 டேப் கம்ப்யூட்டர்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்றனர்.
திருடப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.