நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதைப் போன்று மாதாந்தம் பேருந்து கட்டண திருத்தமும் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேரூந்து கட்டண திருத்தக் கொள்கையை திருத்துமாறு கோரவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.