நெல்லியடி மற்றும் பருத்தித்துறை கொமர்ஷல் வங்கி ஊழியர்கள் இணைந்து பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையை சுத்தம் செய்துள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் காலையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் வங்கியால் பருத்தித்துறை நகரசபைக்கு கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் நன்கொடையாக கொமர்ஷல் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் திரு.இராமச்சந்திரன் சிவஞானத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கடற்கரையை சூழ நிழல்தரும் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சூழலியலாளர் மனோகரன் சசிகரன் கலந்து கொண்டார்