முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன வழக்கை விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழியர்கள் குழுவை ஈடுபடுத்தி ஊழல் குற்றத்தைச் செய்தமைக்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த எராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தெடர்ந்துள்ளதுடன் குறிப்பாக சதொச நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக தனியார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமையாலும் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு இன்று நீதிமன்றத்தில்SamugamMedia முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன வழக்கை விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழியர்கள் குழுவை ஈடுபடுத்தி ஊழல் குற்றத்தைச் செய்தமைக்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த எராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தெடர்ந்துள்ளதுடன் குறிப்பாக சதொச நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக தனியார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமையாலும் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன