இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் முறையை கியூ.ஆர் முறைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில், இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, கொடகவெல, பலாங்கொட மற்றும் கலவான ஆகிய டிப்போக்களுக்கான புதிய லங்கம பஸ் விநியோகம் நேற்று இரத்தினபுரி புதிய நகரில் இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு புதிய பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கை போக்குவரத்து சபையை எப்போதும் தனியார் மயமாக்கப்போவதில்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டனர். இதன்போது, 23 பேருந்துகள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பேருந்து கட்டண முறையில் ஏற்படவுள்ள மாற்றம் அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் முறையை கியூ.ஆர் முறைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில், இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, கொடகவெல, பலாங்கொட மற்றும் கலவான ஆகிய டிப்போக்களுக்கான புதிய லங்கம பஸ் விநியோகம் நேற்று இரத்தினபுரி புதிய நகரில் இடம்பெற்றது.இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு புதிய பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கை போக்குவரத்து சபையை எப்போதும் தனியார் மயமாக்கப்போவதில்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டனர். இதன்போது, 23 பேருந்துகள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.