பிரித்தானியாவின் கட்டுபாட்டில் கீழ் உள்ள டியாகோ கார்சியா தீவில் சுமார் 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை கடந்த 23ஆம் திகதி எமது சமூகத்தின் செய்திப்பிரவு வெளிக்கொண்டு வந்திருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் தாம் பட்ட துன்பங்களை அதில் விவரிக்கின்றனர்.
குறிப்பாக, இந்தியாவில் தாம் மிகவும் துன்பப்பட்டிருந்தாகவும் குறிப்பிடுகின்றனர்.இதில் நான்கு ஆண்களும் ஒரு இளம் யுவதியும் அடங்குகின்றனர்.
இவர்கள் கூறுவது என்ன...எவ்வாறு டியாகோ கார்சியா தீவில் முடக்கப்பட்டிருந்தனர் - என்பது தொடர்பான பதிவே இது...
இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வைத்தியசாலையில் இருந்து இந்த காணொளியினை வெளியிட்டுள்ளனர்.
ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை 22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த பெண் தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது தமது சுயமரியாதையை இழப்பது போன்று உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே தமது வாழ்க்கை கடந்து செல்வதாக கவலை வெளியிடுகின்றனர்.
இவர்களுடன், மேலும் சுமார் 65 பேர் டியாகோ கார்சியா தீவில் உள்ளதாகவும் விலங்குகளை போன்று அடைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
உயிர்வாழ்வதற்கான சுழல் அந்த தீவிலும் தற்போதுள்ள தாம் தங்கியுள்ள ருவாண்டா தலைநகரமான கிகாலியும் வாழ முடியாத நிலையே காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதேவேளை மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கும் போது தான் இந்தியாவில் பிறந்த நாடற்ற மனிதன் என குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த போதும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்கின்றார்.
இரத்த வாந்தி எடுப்பதாவும் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்தால் புகைப்படம் எடுக்குமாறும் இரத்தத்தை கையில் எடுத்து வருமாறு குறிப்பிடுவதாக கவலை வெளியிடுகின்றார்.
சிறைக் கைதிகளுக்கு கூட ஒருசில சுதந்திரம் உள்தாகவும் ஆனால் தமக்கு அந்த சுதந்திரம்கூட இல்லாத அடிமைகளாக வாழ்வதாக கவலை வெளியிடுகின்றனர்.
அத்துடன் ஏதோ ஒருநாட்டில் ஒரு நாள் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தமது இறுதி ஆசை என தெரிவிக்கின்ற இந்த தமிழ் அகதிகள் அந்த தீவீல் வாழ முடியாது என கவலை வெளியிடுகின்றனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் - என 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறி சென்றார் - கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானது என்பதே.... ஆனால் இன்று தமிழ் நாதியற்று வாழ்வதற்கு நாடு இன்றி அலைகின்றான்.......... தமிழன் இல்லாத நாடே இந்த உலகத்தில் இல்லை......... ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை.................................
வெளிநாடு செல்லும் வழியில் இலங்கையர்களுக்கு நடக்கும் கொடுமைகள் - உயிர் தப்பிய 22வயது யுவதியின் கண்ணீர் கதை samugammedia பிரித்தானியாவின் கட்டுபாட்டில் கீழ் உள்ள டியாகோ கார்சியா தீவில் சுமார் 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை கடந்த 23ஆம் திகதி எமது சமூகத்தின் செய்திப்பிரவு வெளிக்கொண்டு வந்திருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அவர்கள் தாம் பட்ட துன்பங்களை அதில் விவரிக்கின்றனர்.குறிப்பாக, இந்தியாவில் தாம் மிகவும் துன்பப்பட்டிருந்தாகவும் குறிப்பிடுகின்றனர்.இதில் நான்கு ஆண்களும் ஒரு இளம் யுவதியும் அடங்குகின்றனர்.இவர்கள் கூறுவது என்ன.எவ்வாறு டியாகோ கார்சியா தீவில் முடக்கப்பட்டிருந்தனர் - என்பது தொடர்பான பதிவே இது.இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வைத்தியசாலையில் இருந்து இந்த காணொளியினை வெளியிட்டுள்ளனர். ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை 22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த பெண் தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது தமது சுயமரியாதையை இழப்பது போன்று உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே தமது வாழ்க்கை கடந்து செல்வதாக கவலை வெளியிடுகின்றனர்.இவர்களுடன், மேலும் சுமார் 65 பேர் டியாகோ கார்சியா தீவில் உள்ளதாகவும் விலங்குகளை போன்று அடைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.உயிர்வாழ்வதற்கான சுழல் அந்த தீவிலும் தற்போதுள்ள தாம் தங்கியுள்ள ருவாண்டா தலைநகரமான கிகாலியும் வாழ முடியாத நிலையே காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.இதேவேளை மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கும் போது தான் இந்தியாவில் பிறந்த நாடற்ற மனிதன் என குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த போதும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்கின்றார்.இரத்த வாந்தி எடுப்பதாவும் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்தால் புகைப்படம் எடுக்குமாறும் இரத்தத்தை கையில் எடுத்து வருமாறு குறிப்பிடுவதாக கவலை வெளியிடுகின்றார்.சிறைக் கைதிகளுக்கு கூட ஒருசில சுதந்திரம் உள்தாகவும் ஆனால் தமக்கு அந்த சுதந்திரம்கூட இல்லாத அடிமைகளாக வாழ்வதாக கவலை வெளியிடுகின்றனர்.அத்துடன் ஏதோ ஒருநாட்டில் ஒரு நாள் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தமது இறுதி ஆசை என தெரிவிக்கின்ற இந்த தமிழ் அகதிகள் அந்த தீவீல் வாழ முடியாது என கவலை வெளியிடுகின்றனர்.யாதும் ஊரே யாவரும் கேளிர் - என 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறி சென்றார் - கணியன் பூங்குன்றனார்யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே. அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானது என்பதே.ஆனால் இன்று தமிழ் நாதியற்று வாழ்வதற்கு நாடு இன்றி அலைகின்றான்.தமிழன் இல்லாத நாடே இந்த உலகத்தில் இல்லை.ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை.