தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றையதினம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியடியில் நடைபெற்றது.
இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள உணவுத் தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.