கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்து உறங்கிய நிலையில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில், இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றையதினம் மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்து உறங்கிய நிலையில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.