• May 10 2024

இலங்கையின் புதிய தூதுவர்களுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு...!samugammedia

Sharmi / Nov 8th 2023, 12:07 pm
image

Advertisement

இலங்கையின்  புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம்  இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள்   திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை  மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து  கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது  நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.



இலங்கையின் புதிய தூதுவர்களுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு.samugammedia இலங்கையின்  புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம்  இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள்   திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை  மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து  கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.அண்மையில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது  நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement