கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள உருத்திரபுரம் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்து மே 18 முள்ளிவாய்க்கால் தினமான இன்றைய தினத்தில் குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக அறிந்த கிராமக்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் என பலரும் ஒன்றுகூடி தொல்லியல் திணைக்களம் எல்லைப்படுத்தும் நடவடிக்கைக்கு வரும்போது எதிர்ப்பை காட்டுவதத்திற்காக இன்று குறித்த ஆலயத்தின் முன்றலில் ஒன்று கூடியமை அவதானிக்க முடிந்தது.
இதன் பொது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன், சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான க.சுகாஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் என பலரும் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.