மன்னாரில் கேரள கஞ்சாவுடன் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபர் பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண்ணை சட்ட நடவடிக்கைக்காக இன்று (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் குடும்பப் பெண் கைது. மீட்கப்பட்ட முக்கிய பொருள். samugammedia மன்னாரில் கேரள கஞ்சாவுடன் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுமன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபர் பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண்ணை சட்ட நடவடிக்கைக்காக இன்று (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.