கடந்த மாசி மாதத்தில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் முரண்பட்டுள்ளது.
அந்த நாட்டை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்ஃபாபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு ரூ. 400 கோடி அபராதத்தை மாஸ்கோ நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், அபராத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷ்யா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து கூகுள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.