காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தவர்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி முகத்திடல் போராட்டம் கட்சி சார்பற்ற போராட்டம் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகளுக்கு ஏற்ப, போராட்டத்தின் பின்னர் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன்படி, அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முழு அதிகாரம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஆளும் தரப்பு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்ததன் நோக்கம் உள்ளுர் மக்களின் பங்களிப்பை பறிப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் SamugamMedia காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தவர்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.காலி முகத்திடல் போராட்டம் கட்சி சார்பற்ற போராட்டம் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகளுக்கு ஏற்ப, போராட்டத்தின் பின்னர் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதன்படி, அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முழு அதிகாரம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஆளும் தரப்பு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்ததன் நோக்கம் உள்ளுர் மக்களின் பங்களிப்பை பறிப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.