யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாமையால் உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகவே ஏற்கனவே குருதிக் கொடை வழங்கி நான்கு மாதத்தைக் கடந்த கொடையாளர்கள் மற்றும் புதிய குருதிக் கொடையாளர்களை இவ் இடர் மிகு காலகட்டத்தில் காலத்தின் தேவையறிந்து இரத்ததானம் வழங்க முன்வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ் இரத்த வங்கி மேலும் தமது அவசர நிலமையினை குறிப்பிட்டுள்ளது.