நித்திரை கொள்பவர்களை தட்டினால் எழுப்பமுயும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆனால் நித்திரை போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
83 கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு, இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்த பின்னர் இவ்வாறு உரையாற்றியிருந்தார்.
மக்களின் நலன்களுக்கு குறுக்காக நிற்பவர்களுக்கு நிச்சயம் சுடுதண்ணி ஊற்றப்பட்டு எழுப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.