இந்திய முதலீட்டாளர்கள் குழுவினருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(24) இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், இலங்கையில் நண்டு வளர்ப்புக்கு பொறுத்தமான இடங்களில் முதலீடுகளை செய்வதற்கும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக குறித்த தொழிலில் ஈடுபடுவோருக்கு வருமானத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று முதலீட்டாளர்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.