இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் 100 ரூபாவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 9810 ரூபாவும் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகரித்த கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.