திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றிய சக மாலுமி ஒருவரை வெட்டிக் கொலை செய்த 42 வயதுடைய இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு மாலுமிகள் தங்கியிருந்த விடுதியில் மது அருந்தியதாகவும், அப்போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை வைத்தியசாலை பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.