• May 05 2024

பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாவு..!

Chithra / Apr 7th 2024, 7:54 am
image

Advertisement

  

மாவனெல்லை - படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஜயதிலக்க என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் கூரிய வாள்களுடன் மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த நபர் பெண் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர் வாளால் தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணை காப்பாற்ற சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாவு.   மாவனெல்லை - படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.நேற்று (06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஜயதிலக்க என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த நபர் கூரிய வாள்களுடன் மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த நபர் பெண் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர் வாளால் தாக்கியுள்ளார்.இதன்போது குறித்த பெண்ணை காப்பாற்ற சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement