யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் புதிய புதிய கட்சிகளின் தலைமைகளை தேடிச்செல்வதாகவும் அவருக்கு என்று ஒரு கொள்கை கிடையாதென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை முன்வைத்திருந்த நிலையில் அவர் இவ்வாறு பதில்களை வழங்கியிருந்தார்.
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் என்றால் அதற்கு ஒரு கௌரவம் இருப்பதாகவும் அவரை போன்று பொது வெளியில் அநாகரிகமாக பொய்யான குற்றச்சாட்டுக்களை தன்னால் முன்வைக்கமுடியாது என்றும் இமானுவேல் ஆனோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
மணிவண்ணன் சிறுபிள்ளைத் தனமாகவே செயற்படுவதாகவும் அவர்களின் வயதுகளுக்கு ஏற்பவே அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த காலத்தில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு தாம் விளம்பரங்களை செய்யவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கே தாம் விரும்புவதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணனுக்கு ஒரு கொள்கை இல்லை- அதனாலேயே புதிய புதிய கட்சிகளுக்கு தாவுகின்றார்- ஆனோல்ட் கருத்து யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் புதிய புதிய கட்சிகளின் தலைமைகளை தேடிச்செல்வதாகவும் அவருக்கு என்று ஒரு கொள்கை கிடையாதென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை முன்வைத்திருந்த நிலையில் அவர் இவ்வாறு பதில்களை வழங்கியிருந்தார்.யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் என்றால் அதற்கு ஒரு கௌரவம் இருப்பதாகவும் அவரை போன்று பொது வெளியில் அநாகரிகமாக பொய்யான குற்றச்சாட்டுக்களை தன்னால் முன்வைக்கமுடியாது என்றும் இமானுவேல் ஆனோல்ட் குறிப்பிட்டுள்ளார்.மணிவண்ணன் சிறுபிள்ளைத் தனமாகவே செயற்படுவதாகவும் அவர்களின் வயதுகளுக்கு ஏற்பவே அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.கடந்த காலத்தில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு தாம் விளம்பரங்களை செய்யவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கே தாம் விரும்புவதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மேலும் தெரிவித்துள்ளார்.