பதுளை, பசறை பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பசறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.