அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் 13 மாதமான குழந்தையான சைராரோஸ் மீது தாய் தவறுதலாக காரை ஏற்றியதால் குழந்தை உயிரிழந்துள்ளது
ஜாப்ரியா என்பவர் தனது வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தனது மாரை சரிபார்த்துவிட்டு காரை நிறுத்த முற்பட்ட தருணம் எதிர்பாரா விதமாக கார் கட்டுப்பாட்டையிழந்து பின்நோக்கி சென்று குறித்த குழந்தை மீது ஏறியதில் குழந்தை படுகாயமுற்றது.
தொடர்ந்து குறித்த குழந்தை சிகிச்சைகளுக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் தீவிர சிகிச்சையளித்தும் பயனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வரினும் குழந்தை மீது காரை ஏற்றி உயிரைப் பறித்த தாயார் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதியப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வருடம் மே மாதம் 16 ம் திகதி பிறந்த இக் குழந்தை வெறும் 13 மாதங்களேயான நிலையில் கடந்த 6 ம் திகதி உயிரிழந்தமை சுட்டிக்காடடத்தக்கது.
13 மாத குழந்தையை காரை ஏற்றிக் கொன்ற தாய்; பயங்கர சம்பவம். samugammedia அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் 13 மாதமான குழந்தையான சைராரோஸ் மீது தாய் தவறுதலாக காரை ஏற்றியதால் குழந்தை உயிரிழந்துள்ளதுஜாப்ரியா என்பவர் தனது வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தனது மாரை சரிபார்த்துவிட்டு காரை நிறுத்த முற்பட்ட தருணம் எதிர்பாரா விதமாக கார் கட்டுப்பாட்டையிழந்து பின்நோக்கி சென்று குறித்த குழந்தை மீது ஏறியதில் குழந்தை படுகாயமுற்றது.தொடர்ந்து குறித்த குழந்தை சிகிச்சைகளுக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் தீவிர சிகிச்சையளித்தும் பயனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் பொலிசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வரினும் குழந்தை மீது காரை ஏற்றி உயிரைப் பறித்த தாயார் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதியப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த வருடம் மே மாதம் 16 ம் திகதி பிறந்த இக் குழந்தை வெறும் 13 மாதங்களேயான நிலையில் கடந்த 6 ம் திகதி உயிரிழந்தமை சுட்டிக்காடடத்தக்கது.