• May 18 2024

மாதுளம்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்..! samugammedia

Chithra / May 8th 2023, 7:00 pm
image

Advertisement

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள  மாலிக் நகரில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியை சேர்ந்த ராஜா அனீஸ், பாத்திமா என்ற தம்பதியினிரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத் என்பவரே உயிரிழந்துள்ளார். 

பெற்றோர் மகனிற்கு மாதுளம் பழத்தினை சாப்பிட கொடுத்துள்ள நிலையில், அதனை சாப்பிட்ட குழந்தை திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயங்கிய தமது குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதை கேட்டு நொறுங்கி போய்யுள்ளனர். 

இதையடுத்து,  பொலிசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினால் கிராமமே பெரும் சோகத்தில் வீழ்ந்துள்ளது.

மாதுளம்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம். samugammedia மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள  மாலிக் நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ராஜா அனீஸ், பாத்திமா என்ற தம்பதியினிரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத் என்பவரே உயிரிழந்துள்ளார். பெற்றோர் மகனிற்கு மாதுளம் பழத்தினை சாப்பிட கொடுத்துள்ள நிலையில், அதனை சாப்பிட்ட குழந்தை திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயங்கிய தமது குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதை கேட்டு நொறுங்கி போய்யுள்ளனர். இதையடுத்து,  பொலிசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினால் கிராமமே பெரும் சோகத்தில் வீழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement