ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதேவேளை இன்றையதினம் அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்ததுடன் எதிர்கட்சிகள் இன்றைய அமர்வை புறக்கணிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.