ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது அன்னாரின் உருவப்படத்திற்கு தீபமேற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ். என். நிபோஜன் நேற்றையதினம் (30.01.2023) தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.