கனடாவின் ரொறன்ரோவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றது.
இந்நிலையில்பனிப்புயல் காரணமாக பஸ் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதிகள் முற்றாக மறைந்த நிலையில் முழுவதுமாக பனிப் பொழிவு நிறைந்து காணப்படுகின்றது.
அதேவேளை குறித்த பனிப்பொழிவில் அங்குள்ள மரங்கள் மற்றும் பொது இடங்களும் அடையாளம் தெரியாதவாறு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.