குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று(26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டது. அதனை, சமூக வலைத்தளங்களில் நேரடியாக அஞ்சல் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.