கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள்
தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமானுடன் கலந்துரையாடினார் என்று ஆளுநரின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.