அரசு பஸ் ஓட்டுநரை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ராணுவ வீரர்கள் தாக்கியதால் , அதனை தட்டிக் கேட்ட மக்களையும் ராணுவத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளவாபாடங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களும் சேர்ந்தே செல்லும். பெரும்பாலும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினரே பாதுகாப்பை வழங்குவார்கள்.
ராணுவ தளபாடங்களினை கொண்டு செல்லும் வழியில் பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை தமது பாதுகாப்பினை வழங்குவார்கள்.
ஆனால், கிருஷ்ணகிரியில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினராலே பிரச்சினை ஏற்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது