மனித நடவடிக்கைகள் பூமியை பாதுகாக்கும் அளவுகோல்களில் எட்டு அம்சங்களில் ஏழு அம்சங்கள் மீறப்பட்டுள்ளதால் பூமி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள 40 விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் அமைப்பே இந்த தகவலை ஆராய்ந்துள்ளது.
நிலம், நீர், காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அழிப்பதன் மூலம் பூமி மீளமுடியாத நிலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமியை பாதுகாக்கும் மற்றும் நியாயமான சூழலாக மாற்றக்கூடிய அனைத்து எல்லைகளையும் மனிதர்கள் மீறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.