தமிழீழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கான ஒரே தீர்வு. இலங்கையின் சுபீட்சத்துக்கும் உறுதிப்பாட்டுக்குமான பாதையும் இதுவேதான் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கறுப்பு ஜூலை நினைவுநாள் பிரிட்டன் பெருநகர மத்தியில் நேற்று எழுச்சியாக நடைபெற்றுள்ளது.
கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடை பெற்று 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் எந்தவித நீதியும் கிடைக்காதமையால் சர்வதேசத்திடம் நீதி கோரி பிரிட்டன் புலம்பெயர் தமிழர்கள் நேற்று மாலை எழுச்சிப் பேரணியில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணி யளவில் பிரிட்டன் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.