• May 04 2024

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கே...! சஜித் தரப்பு நம்பிக்கை...!samugammedia

Sharmi / Nov 8th 2023, 9:13 am
image

Advertisement

எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவுடன் சஜித் பிரேமதாச  வெற்றிபெறுவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமானால் வடக்கிலும், தெற்கிலும் வாழும் அனைத்து இன மக்களினதும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவார். 

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் கடும் சவால்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸ 45 வீத வாக்குகளைப் பெற்றார். 

எனவே,இம் முறை அவருக்கு நிகரான வேட்பாளர்கள் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமானால் அதிலும் இலகுவில் 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெறும். பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி எமது வசமே உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கே. சஜித் தரப்பு நம்பிக்கை.samugammedia எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவுடன் சஜித் பிரேமதாச  வெற்றிபெறுவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமானால் வடக்கிலும், தெற்கிலும் வாழும் அனைத்து இன மக்களினதும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவார். இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் கடும் சவால்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸ 45 வீத வாக்குகளைப் பெற்றார். எனவே,இம் முறை அவருக்கு நிகரான வேட்பாளர்கள் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமானால் அதிலும் இலகுவில் 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெறும். பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி எமது வசமே உள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement