• May 06 2025

களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் ஏற்பட்ட சிக்கல்

Chithra / May 5th 2025, 12:21 pm
image


களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் போதுமான கூடாரங்கள், இருக்கைகள் அமைக்கப்படாததால்  வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் பல மணி நேரம் சிரமத்திற்கு  ஆளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அவர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததையும், சிலர் வாக்குப் பெட்டிகளை தரையில் வைப்பதையும், அவற்றின் மேல் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது.

இந்த விடயத்தை விசாரித்ததில், கூடாரங்களை அமைக்க பொறுப்பேற்ற ஒப்பந்ததாரர் கூடாரங்களை முறையாக அமைக்கவில்லை என்பதும், உத்தரவிட்டபடி பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கூடாரங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட இரும்புக் குழாய்களும், பாதி முடிக்கப்பட்ட இரும்பு கூடாரங்களும் ஆங்காங்கே காணப்பட்டன.

கோரப்பட்ட எண்ணிக்கையிலான நாற்காலிகள் வழங்கப்பட்டிருந்தாலும், வாக்குப் பெட்டிகள் மிக விரைவாக வழங்கப்பட்டதாலும், வாகனங்களை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு வருவதில் சிரமம் இருந்ததாலும் நெரிசல் ஏற்பட்டதாக களுத்துறை மாவட்ட செயலகத்தின் செயல்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.


களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் ஏற்பட்ட சிக்கல் களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் போதுமான கூடாரங்கள், இருக்கைகள் அமைக்கப்படாததால்  வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் பல மணி நேரம் சிரமத்திற்கு  ஆளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததையும், சிலர் வாக்குப் பெட்டிகளை தரையில் வைப்பதையும், அவற்றின் மேல் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது.இந்த விடயத்தை விசாரித்ததில், கூடாரங்களை அமைக்க பொறுப்பேற்ற ஒப்பந்ததாரர் கூடாரங்களை முறையாக அமைக்கவில்லை என்பதும், உத்தரவிட்டபடி பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.அதன்படி, கூடாரங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட இரும்புக் குழாய்களும், பாதி முடிக்கப்பட்ட இரும்பு கூடாரங்களும் ஆங்காங்கே காணப்பட்டன.கோரப்பட்ட எண்ணிக்கையிலான நாற்காலிகள் வழங்கப்பட்டிருந்தாலும், வாக்குப் பெட்டிகள் மிக விரைவாக வழங்கப்பட்டதாலும், வாகனங்களை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு வருவதில் சிரமம் இருந்ததாலும் நெரிசல் ஏற்பட்டதாக களுத்துறை மாவட்ட செயலகத்தின் செயல்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement