• May 04 2024

வனப்பகுதியில் விறகு வெட்ட சென்றவருக்கு நேர்ந்த கதி..! களமிறங்கிய பொலிஸார், இராணுவம் samugammedia

Chithra / May 22nd 2023, 9:51 am
image

Advertisement

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலியா தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் ஒரு ஜெகட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வனப்பகுதியில் விறகு வெட்ட சென்றவருக்கு நேர்ந்த கதி. களமிறங்கிய பொலிஸார், இராணுவம் samugammedia நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலியா தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார்.நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர்.இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் ஒரு ஜெகட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.காணாமல் போன நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement