• May 18 2024

யாழில் வீதியில் சென்ற சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்..! samugammedia

Chithra / Nov 1st 2023, 5:05 pm
image

Advertisement

 


சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்து பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

அவர் தனது சைக்கிள் முன் கூடைக்குள் கைப்பையை வைத்து விட்டு சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த நபர் ஒருவர் கூடைக்குள் இருந்த கைப்பையை அபகரித்து சென்றுள்ளார். 

கைப்பைக்குள் ஐந்தேகால் பவுண் நகை, 90 ஆயிரம் ரூபாய் பணம், பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன இருந்ததாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழில் வீதியில் சென்ற சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த விபரீதம். samugammedia  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்து பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அவர் தனது சைக்கிள் முன் கூடைக்குள் கைப்பையை வைத்து விட்டு சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த நபர் ஒருவர் கூடைக்குள் இருந்த கைப்பையை அபகரித்து சென்றுள்ளார். கைப்பைக்குள் ஐந்தேகால் பவுண் நகை, 90 ஆயிரம் ரூபாய் பணம், பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன இருந்ததாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement