• May 18 2024

கொள்ளுப்பிட்டி பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் இழப்பீடு...!samugammedia

Sharmi / Oct 6th 2023, 11:44 am
image

Advertisement

இன்று (06) காலை  கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த விபத்தினையடுத்து டூப்ளிகேஷன் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கொள்ளுப்பிட்டி பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் இழப்பீடு.samugammedia இன்று (06) காலை  கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் குறித்த விபத்தினையடுத்து டூப்ளிகேஷன் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement