யாழ்ப்பாணம், கந்தர்மடத்திலுள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், வீடு தளபாடங்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
கந்தர்மடம், பழம் வீதியிலுள்ள மருத்துவ தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களின் முன்னரும் இந்த வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காணி உரிமை தொடர்பான தகராற்றில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.