• May 10 2024

யாழின் முக்கிய பகுதியில் கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 9:44 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸார் வடமராட்சி துன்னாலை பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த சந்தேகநபர் நீண்ட காலமாக துன்னாலை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை அல்வாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நெல்லியடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழின் முக்கிய பகுதியில் கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்.samugammedia யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸார் வடமராட்சி துன்னாலை பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த சந்தேகநபர் நீண்ட காலமாக துன்னாலை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதேவேளை அல்வாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நெல்லியடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement