ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வடமேற்கு பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வு சம்பவங்களினால் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.