பல்வேறு பகுதிகளில் தொடர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.
துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று(30) இரவு நெல்லியடிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வடமராட்சி பகுதியில் பரவலாக தொடர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.