புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று காலை தூக்கிலிட்டு உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.
குறித்த சம்பவ்ம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய நுவரெலியா ஈட்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவரெனவும் புத்தளம் கடையாக்குளம் பகுதியில் வாடகை வீடில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி வருகைத் தந்து சடத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
குடும்ப சண்டை - மன அழுத்தத்தில் உயிர்மாய்த்துக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை -உருக வைக்கும் கடிதம் samugammedia புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று காலை தூக்கிலிட்டு உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.குறித்த சம்பவ்ம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய நுவரெலியா ஈட்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவரெனவும் புத்தளம் கடையாக்குளம் பகுதியில் வாடகை வீடில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.குடும்பத் தகராறு காரணமாகவே கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி வருகைத் தந்து சடத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.