முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தனது 75 ஆவது வயதில் காலமானார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இலங்கையின் 30வது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய விக்டர் பெரேரா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16) மாலை உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையை வசிப்பிடமாக கொண்ட அவர் 4 பிள்ளைகளின் தந்தையுமாவார்.
பெரேரா 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை காவல்துறையின் 30வது இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு 2008 ஜூன் 03 இல் ஓய்வு பெற்றார்.
அதேவேளை மறைந்த விக்டர் பெரேராகொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.