இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதிஅழகனின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு‘ நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ் விழாவில் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டோ, புரவலர் ஹாசிம் உயர், ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா. தவயோகராஜா, அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சந்துரூ பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.