கிளிநொச்சி வேரவில் மருத்துவமனை முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேரவில் மருத்துவமனை முன்பாக பயணித்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவர் மோதியதாகவும், விபத்தில் படுகாயமடைந்த அவர் முழங்காவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் வலைப்பாட்டைச் சேர்ந்த சிதம்பரநாதன் வர்மன்குமார் என்ற 32 வயது இளைஞனே உயிரிழநதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.