ஒட்டி சுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் நேற்று(05) இரவு வீதியில் நின்ற உழவியந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலம் ஒட்டிசுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
வீதியில் நெல்லினை காய வைத்து ஏற்றி கொண்டு நின்ற உழவியந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில் உழவியந்திரத்தின் உரிமையாளர் மற்றும் ஒருவர் ஒட்டி சுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டி சுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டிசுட்டானில் கோர விபத்து. இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia ஒட்டி சுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் நேற்று(05) இரவு வீதியில் நின்ற உழவியந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர்களின் சடலம் ஒட்டிசுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுவீதியில் நெல்லினை காய வைத்து ஏற்றி கொண்டு நின்ற உழவியந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில் உழவியந்திரத்தின் உரிமையாளர் மற்றும் ஒருவர் ஒட்டி சுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டி சுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.