தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து விடவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது வெறும் கானவாகவே போகுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்திலே மக்கள் சரியான தீர்ப்பை எடுப்பார்கள், அதற்கான உரிமை அவர்களுக்கு இருப்பதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49 ஆவது நினைவாண்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் எப்போதும் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் ஒன்றாகவே பயணிக்கும் என நம்புவதாகவும் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த சிந்தனையில் இருப்பவர்கள் சேர்ந்து பயணிக்க முடியும் எனவும் ஒரு கட்சி மற்றுமொரு கட்சியை அச்சுறுத்துவது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
மேலும் சிறு பிரச்சனைகள் இருப்பதால் கூட்டமைப்பு உடைந்து விடும் என்று எண்ணி ரசிக்கின்றார்கள், அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு பிரிந்துவிடும் என்பது வெற்றுக்கனவே - சி.வி.கே சிவஞானம் திட்டவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து விடவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது வெறும் கானவாகவே போகுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அரசியல் களத்திலே மக்கள் சரியான தீர்ப்பை எடுப்பார்கள், அதற்கான உரிமை அவர்களுக்கு இருப்பதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49 ஆவது நினைவாண்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் எப்போதும் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் ஒன்றாகவே பயணிக்கும் என நம்புவதாகவும் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.ஒன்றிணைந்த சிந்தனையில் இருப்பவர்கள் சேர்ந்து பயணிக்க முடியும் எனவும் ஒரு கட்சி மற்றுமொரு கட்சியை அச்சுறுத்துவது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .மேலும் சிறு பிரச்சனைகள் இருப்பதால் கூட்டமைப்பு உடைந்து விடும் என்று எண்ணி ரசிக்கின்றார்கள், அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.