தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களது வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான கொழும்பு மாநகர சபையின் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் நிகழ்வு சர்வ மத தலைவர்களின் ஆசீர்வதங்களுடன் இன்று ஜக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு மயூராபதி இந்து கோவிலுக்கு சென்று சஜித் பிரேமதாஸ மதவழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவை இன்று கூடியிருந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் 9 ஆம் திகதிக்குப் பின்னர் இதை கோருமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும், இதன் மூலம் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மேலும் அரசியல் சதித்திட்டங்களில் ஈடுபட்டு தேர்தலை சீர்குலைக்க இது வாய்ப்பாக அமையும் எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு பேரவையின் இரகசியம் பேணப்படும் என வாக்குறுதியளித்த போதிலும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசியலமைப்பு பேரவையின் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்பதால், அந்த தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிர்வாக செயற்பாடுகளில் தவறு செய்பவர்களுக்கு சிவில் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நீதித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கின் தீர்ப்பு இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதனால், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் இவ்வாறான சட்ட விரோத செயல்களைச் செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை சேர்ப்பது சட்டவிரோதமானது – சஜித் காட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களது வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான கொழும்பு மாநகர சபையின் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் நிகழ்வு சர்வ மத தலைவர்களின் ஆசீர்வதங்களுடன் இன்று ஜக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.குறிப்பாக கொழும்பு மயூராபதி இந்து கோவிலுக்கு சென்று சஜித் பிரேமதாஸ மதவழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அரசியலமைப்பு பேரவை இன்று கூடியிருந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மார்ச் 9 ஆம் திகதிக்குப் பின்னர் இதை கோருமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும், இதன் மூலம் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மேலும் அரசியல் சதித்திட்டங்களில் ஈடுபட்டு தேர்தலை சீர்குலைக்க இது வாய்ப்பாக அமையும் எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.அரசியலமைப்பு பேரவையின் இரகசியம் பேணப்படும் என வாக்குறுதியளித்த போதிலும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசியலமைப்பு பேரவையின் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்பதால், அந்த தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டின் நிர்வாக செயற்பாடுகளில் தவறு செய்பவர்களுக்கு சிவில் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நீதித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கின் தீர்ப்பு இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதனால், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் இவ்வாறான சட்ட விரோத செயல்களைச் செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.