கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த சந்திரன் இராசலிங்கம் என்னும் நபர் ஒருவரே இவ்வாறு சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் காணி வாங்கிய அவர், அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, சித்திரை வளர்மதி கழுவாய் நாளன்று சிவலிங்கம் ஒன்றை நந்தியெம்பெருமானுடன் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த நிலையில், சிவலிங்கம் பிரதிஸ்டை தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.