கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 16 வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நபரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்