• May 05 2024

17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகும் Joe Root! samugammedia

Tamil nila / Nov 26th 2023, 5:28 pm
image

Advertisement

17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீராட் ஜோ ரூட் (Joe Root) அறிவித்துள்ளார்.

17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மதம் 23ஆம் திகதி முதல் மே மாதம் 29 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடருக்காக வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்கள் தொடர்பான விபரங்களை இன்றைய தினத்திற்குள் வழங்குமாறு IPL நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலே, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜோ ரூட் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.

இந்த நிலையிலே, ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார்.

17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகும் Joe Root samugammedia 17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீராட் ஜோ ரூட் (Joe Root) அறிவித்துள்ளார்.17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மதம் 23ஆம் திகதி முதல் மே மாதம் 29 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொடருக்காக வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்கள் தொடர்பான விபரங்களை இன்றைய தினத்திற்குள் வழங்குமாறு IPL நிர்வாகம் அறிவித்திருந்தது.இந்த நிலையிலே, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜோ ரூட் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.இந்த நிலையிலே, ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார்.

Advertisement

Advertisement

Advertisement